உன் இதழில்
தேனெடுக்க 
எப்பொழுது 
அனுமதிப்பாய்
பெண் பூவே....
உன் உதடு 
பேசிய மழலை 
மொழியை 
என் உதட்டால்
கிருக்கினேன் 
முத்தகவிதயாய்..

அம்மா

பலமுறை 
சென்றிருக்கிறேன்
தொலைதூரம்
அப்பொழுது
சொல்லியிருக்கிறேன்
தயக்கமில்லாமல்...


கடைசிபயணம்
வெகுதூரம்என்பதால்
சற்றுகலங்கிடவே
செய்தேன்
ஒருநாழிகை
கழிந்திருந்தால்
உன்னுள்
உறங்கியிருக்கும்
கண்ணீர்துளிகள்
உயி்ர்பெற்றிருக்கும்...


உன்னை
கலங்கவைக்க
மனமில்லாமல்
தயங்கியேசென்றேன்.....


அப்பொழுது
தெரியவில்லை
அதுஉனக்கு
கடைசிபயணம்என்று
தெரிந்திருந்தால்
அப்பொழுதே கதறி
அழுதிருப்பேன் 
உன் பாசத்திற்காக...

இருள்

இருட்டு நரகத்தில்
குருட்டு குழந்தையாய் நான்
ஆரேழுநாட்களில்
பிரசவிக்கபோகிறாள்
என்னை..,
வேண்டாமென்று
பலமுறை எட்டி
உதைக்கிறேன்
தாக்கியும்
பார்க்கிறேன்
பெற்றேதான்
தீருவேன் என
பிடிவாதமாய்
பிரசவித்தாள்..,
அம்மா என்றழைத்த எனக்கு
அப்போது தெரியவில்லை
அவளும் குருடியென்று....
 என்னையே 
 பின்தொடரும்
 என் நிழலை பார்த்தேன் 
 உன் பிம்பத்தை
 பிரதிபலித்தது....

 கண்ணுக்குள் 
 தேடி வரும் 
 என் கனவை பார்த்தேன் 
 உன் நினைவை 
 பிரதிபலித்தது....

 பிரிந்து போன 
 பாசத்தை கன்டேன் 
 உன் காதலை 
 பிரதிபலித்தது....

பயம்

   கண்ணீர் விட
   மனமில்லை 
   கரைந்து விடுவாயோ 
   என்று..,

   சுவாசிக்க 
   மனமில்லை 
   உனக்கு குளிருமோ 
   என்று...,

   இறக்க கூட
   மனமில்லை உன்னை 
   பிரிந்து விடுவேனோ 
   என்று......

2ஜிதேவதை

   நடுநிலை வகுடெடுத்த
   காரிருள் கூந்தல்..!
   பவள பாறயாய் நெற்றி்..!
   காதலால் வீழ்த்த துடிக்கும்
   புருவங்கள்
   இருதுருவங்களாய்..!
   தாமர இலையில்
   நீரைபோல கண்மணிகள்..!
   மாணிக்க கல்லில்லாத
   மூக்குத்தி..!
   குயில் தின்னாத உதடு..!
   மார்பு கூட்டினிலே
   எனக்கான வீடு..!
   ஏஞ்சலினாவே ஏங்க வைக்கும்
   அழகிவள்..!
   என் மனதை கொள்ளயடித்த
   2ஜி தேவதை நீ...!

2010

   என்னவளின் 
   செந்தமிழ் கேட்ட
   "முதல் வருடம்"
   நட்பில் கலந்து
   காதலாய் மாறிய
   "முதல் வருடம்"
   என் தேவதையின்
   முகம் கண்ட
   "முதல் வருடம்"
   உயிரில் உருகி
   உறவாகிய
   முதல் வருடத்தை
   பிரிய சற்றே
   கலக்கமே.........!

நினைவுகள்

   கலியுக பெண்ணே
   காதலால் ஆனேன் 
   உன் காதலனாய் 
   காரிருள் சூழ 
   கருமேகங்கள்
   பறைசாற்றுகின்றன
   நம் காதலை 
   உன் முகம் பாராமல்
   நனைகிறேன் 
   நீரால் அல்ல 
   உன் நினைவுகளால்........!

பதற்றம்

   நண்பர்களின்
   செல்போன்கள்
   ரிங்டோன்களால்
   சினுங்குபோல் கூட
   சற்றே என் மனம் 
   பதருகிறது
   எனக்கான உன் 
   அழைப்போ என்று......!