என்னவளின் செந்தமிழ் கேட்ட "முதல் வருடம்" நட்பில் கலந்து காதலாய் மாறிய "முதல் வருடம்" என் தேவதையின் முகம் கண்ட "முதல் வருடம்" உயிரில் உருகி உறவாகிய முதல் வருடத்தை பிரிய சற்றே கலக்கமே.........!
கலியுக பெண்ணே காதலால் ஆனேன் உன் காதலனாய் காரிருள் சூழ கருமேகங்கள் பறைசாற்றுகின்றன நம் காதலை உன் முகம் பாராமல் நனைகிறேன் நீரால் அல்ல உன் நினைவுகளால்........!